பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேற்கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு போன்ற 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக 9445014450, 9445014436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.