போளூர் குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 17 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா!

 

போளூர் பகுதியில் உள்ள நற்குன்று மலையில் அமைந்துள்ள குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 17 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. இவ்விழா நிகழும் ஐப்பசி மாதம் 6-ஆம் தேதி 23.10.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 31.10.2022 திங்கட்கிழமை வரை 9 நாட்கள் நடைபெறும். தினமும் காலை 7.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் அபிஷேக அலங்காரம் மகாதீப ஆராதனை மற்றும்  பிரசாதம் வழங்கப்படும். மாலையில் பஜனையும் தமிழ் புலவர்கள் சொற்பொழிவும் நடைபெற உள்ளது மற்றும் 31.10.2022 திங்கட்கிழமை ஸ்ரீமுருகனுக்கு திருக்கல்யாணமும் அன்னதானமும் நடைபெறும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.