செப்-1 ஆம் தேதி முதல் போளூரில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு தினமும் குளிர் சாதனப் பேருந்து இயக்கம்!

செப்-1 ஆம் தேதி முதல் தடம் எண்: 122 WFF குளிர் சாதனப் பேருந்து போளூரில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு தினமும் இயக்கப்படுகிறது.

பேருந்து புறப்படும் ஊர் மற்றும் நேரம் பற்றிய விவரம்:

இந்த பேருந்து காலை 6:00 மணிக்கு வந்தவாசியில் கிளம்பி உத்திரமேரூருக்கு 6:45 க்கும், சென்னைக்கு 9:00 மணிக்கும் சென்றடைகிறது.

சென்னையில் காலை 9:30 மணிக்கு கிளம்பி உத்திரமேரூருக்கு 11:40 க்கும், வந்தவாசிக்கு 12:30 க்கும், சேத்துப்பட்டுக்கு 01:25 க்கும், போளூருக்கு 02:15 க்கும் வந்தடைகிறது.

போளூரில் இருந்து மதியம் 3:30 மணிக்கு கிளம்பி சேத்துப்பட்டுக்கு மாலை 4:15 க்கும், வந்தவாசிக்கு மாலை 5:00 மணிக்கும், உத்திரமேரூருக்கு மாலை 6:00 மணிக்கும், சென்னை கோயம்பேட்டிற்கு 8:10 க்கும் சென்றடைகிறது.

இரவு 8:50க்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பி உத்திரமேரூருக்கு இரவு 11:00 க்கும், வந்தவாசிக்கு இரவு 11.50 க்கும் வந்தடைகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.