திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மலை மீது ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு தீப மை நெற்றியில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமான் 1000 கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.