அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சுயம்பு நாதேஸ்வரர் ஆலயத்தில் 6 ஆம் ஆண்டு திருவாசக முற்றோதல் பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சுயம்பு நாதேஸ்வரர் ஆலயத்தில் 6 ஆம் ஆண்டு திருவாசக முற்றோதல் பெருவிழா நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் சித்திரை திங்கள் (தமிழ் வருட பிறப்பு ) முதல் நாள் வியாழக்கிழமை (14-04-2022) திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினம் காலை 5.30 மணிக்கு சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் திருவாசகம் முற்றோதல் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

காலை 7.00 மணிக்கு: முன்னவனே முன் நிற்க விடை கொடி ஏற்றம்.
காலை 8.00 மணிக்கு: பன்னிரு திருமுறைகளுடன் அருள்நிறை நடராஜர் திருமேனி திருவீதியுலா
காலை 10.00 மணி முதல் மாலை வரை: அருள்நிறை சுயம்பு நாதேஸ்வரர் தலைமையில், ஏகன் அநேகன் சிவனடியார் திருக்கூட்டம்,ஆவடி, சென்னை நிகழ்த்தும் தேன் தமிழ் திருவாசகம் முற்றோதல் வழிபாடு
பகல் 12.00 மணிக்கு: அன்னதானம்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.