திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை – கலெக்டர் தகவல்!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும்.

அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவசப் பயணச் சலுகை உண்டு.

தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கி பயில வழிவகை செய்து கொடுக்கப்படும்.

வயது வரம்பு: 12 முதல் 25 வரை (இருபாலரும்)

தகுதி: எழுத படிக்க தெரிந்தவர்கள் (குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி)

கல்வி உதவித்தொகை: மாதந்தோறும் ரூ. 400

அணுக வேண்டிய முகவரி: மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசிரியர், செங்கம் சாலை சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் திரு.முருகேஷ், இ.ஆ.பா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.