திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என முருகேஷ் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?
இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், […]
போளூரில் அனுமன் ஜெயந்தி விழா!
போளூரில் அனுமன் ஜெயந்தியையொட்டி முன்னிட்டு ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 45 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கிரேன் மூலம் வடமலை,சாத்துக்கொடி மாலை, துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அணிவித்த வடமாலையும், சாத்துக்கொடி மாலையும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி அகல் விளக்கு தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டார்கள்