சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு!

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது புதிதாக பெறப்படும் இணைப்புகளுக்கு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை 1450 ரூபாய் என்று இருந்த நிலையில், இனி 2200 ரூபாய் செலுத்த வேண்டும் .
  • அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும்.
  • 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், 800 ரூபாயில் இருந்து 1150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரின் விலையும் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.