கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிமீ நீண்ட வரிசையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

வைகுண்டம் வளாகத்தில் உள்ள 33 குடோன்களில் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, வரிசையில் அனுப்பப்பட்டாலும், 3 கி.மீ.க்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.04:42 PM

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.