போளூர் ஊராட்சி ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சி மற்றும் அத்திமூர்‌ ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 5 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வகை வாழைப்‌ பூங்கா அமைக்கும்‌ இடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்‌ மூலம்‌ புதிய குளம்‌ அமைக்கும்‌ பணிகளையும் மற்றும் அத்திமூர்‌ ஊராட்சி துவக்கப்பள்ளியில்‌ பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்‌ கீழ்‌ கழிவறை புனரமைக்கும்‌ பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.முருகேஷ்‌ அவர்கள்‌ செய்தியாளர்‌ பயணத்தின்‌ போது ஆய்வு செய்தார்‌.

இந்த ஆய்வின்‌ போது மாவட்ட வன அலுவலர்‌ திரு.அருண்லால்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்‌ திரு.இராமகிருஷ்ணன்‌, உதவி திட்ட அலுவலர்‌ திரு.அருண்‌, உள்ளாட்சி பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு துறை உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.