வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரீமியத்தொகை இன்று (01.06.2022) முதல் உயர்வு!

கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்தப்படும் பிரீமியமும் உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையமும், மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகமும், கலந்து ஆலோசித்து இந்த பிரிமியக் கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளன.

அதன்படி,

150சிசிக்கு மேல் உள்ள 2 சக்கர வாகனங்கள்-15% உயர்வு
1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்கள்-6% உயர்வு
1000சிசி புதிய தனியார் கார்- 23% கூடுதல்
1000-1500 சிசி வரையிலான புதிய தனியார் கார் ஒராண்டு 11% கூடுதல்
1500சிசிக்கு கீழ் உள்ள காருக்கு பிரீமியம் குறைவு
கல்வி நிறுவன வாகனங்களுக்கு 15% தள்ளுபடி
புதிய இரு சக்கர வாகனங்களுக்கு 17% உயர்வு
75 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு பிரீமியம் 175% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.