ஊரடங்கு குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண 24 மணி நேரமும் இயங்கும் அலைபேசி எண்கள் அறிமுகம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்

94981-81236,
94981-81239,
72007-06492,
72007-01843

ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.