மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு..!

மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும், மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும், தமிழகம் முழுவதும் சிறப்பு பெயா் மாற்றும் முகாமை மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள (2,811) அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் இந்த முகாமில், மின் நுகா்வோர்கள் தங்களுக்கு உரிய ஆதார் எண், வாரிசு சான்று, சொத்து வரி ரசீது நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், அதற்கான கட்டணமாக ரூ.708-ஐ சமா்ப்பித்து, மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த சிறப்பு முகாமில், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால், உடனடியாக பெயர் மாற்றம் செய்து தரப்படும். இன்னும் ஒரு வார அவகாசமே இருக்கும் இந்த சிறப்பு முகாமில், இதுவரை 1.08 லட்சம் பேர் மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.