திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌, முன்னாள்‌ படை வீரர்கள்‌ தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவை 1.3.2022-க்குள்‌ புதுப்பித்துக்கொள்ளலாம்‌. முன்னாள்‌ படைவீரர்கள்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ இயங்கி வரும்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌, இந்தச்‌ சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்‌ என்று கலெக்டர் முருகேஷ்‌ வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.