தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 2022-2023ஆம் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் வழங்கப்படும், அதனால் பள்ளி வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் காலையில் 8.30மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.