திருவண்ணாமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்தில் அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.தெ. பாஸ்கரன் பாண்டியன் அவர்களும் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.