திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ. 3.20 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மணிலா மரச்செக்கு சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு மையம் மற்றும் நவீன சிப்பம் கட்டும் அலகு கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் அன்று (1.11.2022) நேரில் சென்று ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) திருவண்ணாமலை திரு.சி ஹரகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.