சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது!

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 06:04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரை நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

உலகின் வரலாற்றில் இந்தியா மேலும் ஒரு மயில் கல்லை இன்று கடக்கவுள்ள நிலையில் அதன் நேரடி ஒளிபரப்புகளை மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து பயன்பெற இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கங்களில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.

ISRO website https://www.isro.gov.in/
ISRO Youtube channel https://t.co/92aHKFUvzd
ISRO Facebook page https://facebook.com/ISRO

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.