தொடர் மழையால் கலசபாக்கம் தொகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

கலசபாக்கம் தொகுதியிலும், போளூர் அருகிலுமாக அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று (18.05.2022) தண்ணீர் திறந்து விடப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள படவேடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், ராமநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும், ஆற்றுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அந்தந்த ஊராட்சி சார்பாக தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செண்பகத்தோப்பு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு தாலுகா பகுதியில் உள்ள 48 ஏரிகள் நிரம்பும். மேலும் 7 ஆயிரத்து 497 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.